முடிந்த பெருநாளும் - வெளிநாட்டு வாழ்க்கையும்
🫒🫒🫒🫒🫒🫒📚🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒🫒
அனைவருக்கும் ஈத் முபாரக்!..
🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧
கஷ்டம் எனத் தெரிந்ததும் குடும்பத்துக்காய் அனைத்தையும் செய்து விட்டு
ஓரமாய் தனது அறையில் சோகமாய் தூங்கும்
அநாதை வாழ்க்கைக்கு பெயர் தான்
வெளிநாட்டு வாழ்க்கை"
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
![]() |
இவர்கள் தன் தேவைகள் என்ன என்பதனை அறிந்தும் அவைகளை கூட பூர்த்தி செய்யாமல் குடும்பத்தின் தேவைகளுக்காக தம்மை அற்பணித்த தியாகிகள்!...
வாழ்க்கையில் நாலு சிவருக்குள் தன் உணர்வுகளை அடக்கிக்கொள்ளும் உத்தமர்கள், தியாகிகள் ஆண்கள் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து தன்னுடைய குடும்ப கஷ்டத்துக்காக உழைக்கும் பெண்களும் தான் பாவம் இவர்கள் தங்களை மறந்து தம் குடும்பம் நல்லா இருக்கணும் என்றதுக்காகவே உழைத்து பாடுபடுகின்ற தியாகிகள்.
வெளிநாடுகளில் ஆதரவின்றி தவிக்கும் அநாதை போன்றவர்கள். அடுத்த மாதம் என் பிரச்சினைகள் தீர்ந்து விடும் அடுத்த வருடம் தாய்நாடு சென்று குடும்பத்தோடு பெருநாள் கொண்டாடலாம் என்று காலம் காலமாக தொலைபேசியிலே தன்னுடைய வாழ்க்கையை அற்பணிக்கும் தியாகிகள் அல்லவா இவர்கள்.
இவர்கள் சிலவு செய்ய தெரியாதவர்கள் அல்ல:- தாம் சிலவளிக்கும் சிலவை கூட மிச்சம் வைத்து குடும்பத்துக்காக அனுப்பி வைத்து
🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
இவர்களுக்கு இது வாங்கினீங்களா??
அவங்களுக்கு அது வாங்கினீங்களா??
அவங்க பாவம்!
இவங்க பாவம்! எதுவும் வாங்கிக் கொடுங்க என்று சொல்லி அவர்கள் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழனும் என்று
தன் சந்தோசத்தை மறைத்து வாழ்பவர்கள் இவர்கள்!..
அதிலும் வேலை தேடி தேடி தேய்ந்து போனவர்கள் நிலை!... ஐயோ பரிதாபம்...
நான் ஏமாந்து விட்டேன் என்று வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல், மனதை கள்ளாக்கிக் கொண்டு Facebook, whatsapp இல் இருந்ததில் நல்ல ஒரு dress ஐ போட்டுக் கொண்டு நானும் சந்தோசமாக இருக்கின்றேன், என்னை நினைத்து யாரும் சங்கடமடைய கூடாது என்று Stutas வைத்து நடிக்கும் தியாகிகள்!...
தாய் நாட்டில் இருக்கும் பொது பார்த்து பார்த்து சலித்து போன தோதல், பலகாரம்,கேக்,சீனிமா, பெருநாள் பிரியாணி இவை ஒரு வாய் கிடைக்காதா என்ற பெரிய ஏக்கத்தில் ஒரு வீடியோ call ஓடு முடிந்து விட்டது இந்த பெருநாள்...
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
மனைவி, பிள்ளைகள், உம்மா, வாப்பா, சகோதர்கள், சகோதரிகள், நண்பர்கள் அனைவருருடனும் வீடியோ call பேசி சந்தோசமானது இந்த கரடு முரடான உள்ளம். ஆல்ஹம்துலில்லாஹ்...
நாளைக்கு திரும்ப வேலைக்கு போகனமே... கொஞ்சம் தூங்கிக்குவோம்!... 😔😔😔😔😔😔
வெளிநாடுகளில் வாழும் உறவுகள் அனைவருக்கும் மீண்டும் ஈத் முபாரக் ஈகை திருநாள் பெருநாள் வாழ்த்துக்கள் ஈத் முபாரக்...
paragahakotuwa
No comments:
Post a Comment